Tuesday, July 31, 2012

இப்படியே விட்டால் சாமி குத்தமாயிடும் .என்று வீறு கொள்ளும் இவர்கள்-வீடியோ

மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.

இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.

மீடியா கேமராமேனும் உடந்தையா...?

இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.

;நன்றி-

http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html

லண்டன் ஒலிம்பிக் -ஆரம்ப வைபவத்தில் -வீடியோ

லண்டன் ஒலிம்பிக் தொடக்க வைபவத்துக்கு எலிசபத் மகாரணியை ஜேம்ஸ் பொன்ட் ஹெலிகொபடரில் அழைத்து வந்து ஹெலிகொப்டரிலிருந்தே பாரசூட்டில் இருந்து குதித்து வைபவ இடத்துக்கு வந்த மாதிரி காட்டி இருக்கினம் ....கீழே பாருங்கோ ...ஹி ஹி

Sunday, July 15, 2012

தோழர் சண்முகதாசன் அவர்களைப் பற்றிய விவரண படம்

யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் 1943 இல் பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டு தொழிற் சங்க இயக்கத்திலிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அங்கத்தவரானார். கட்சி சீன சார்பு - சோவியத் சார்பு என்று பிரிந்ததைத் தொடர்ந்து 1964 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் அணியின் பொதுச் செயலாளரானார். அக்கட்சி சார்பில் 1965 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியைத் தொடர்ந்து 1971 இல் சண்முகதாசன் கைதாகி ஓராண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த காலத்தில் ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கை வரலாறு (A Marxist looks at the History of Ceylon) என்ற நூலை எழுதினார்.

Friday, July 06, 2012

சேதுராமன் -பொன்னுச்சாமி -தெட்சாணாமூர்த்தி(நாதஸ்வரம் -தவில்)-வீடியோ

தில்லான மோகனம்மாள் திரைபடத்தில் பங்களித்தமையால் அந்த காலத்தில் சேதுராமன் பொன்னுச்சாமி இருவரும் இலங்கையில் பிரபலமாக அறியபட்டார்கள் .

. அதனால் அபபட வந்த காலத்துக்கு பின் யாழ் வடமராட்சி கரவெட்டியிலுள்ள ஏதோ ஒரு கோயில் (யாக்கரு விநாயகர் கோவில் அல்லது கிழவிதோட்ட பிள்ளையார் கோவில்) திருவிழாக்கு இவர்களை இந்தியாவில் இருந்து அழைத்ததாக சிறுவயது ஞாபக பதிவு சிறிதாக வந்து போகிறது . .

அத்தோடு அப்பொழுது இலங்கையில் மட்டுமின்றி இந்தியா மலேசியா போன்ற நாடுகளில் கூட பிரபலமாக இருந்த தவில் வித்துவான்தெட்சாணாமூர்த்தி அவர்கள் இவர்களுக்கு இணையாக தவில் வாசித்ததாக பேசி க்கொண்டார்கள்..


மேலே இணைத்த வீடியோக்களில் முதலாவதாக சேதுராமன் பொன்னுச்சாமி அவர்களுடையதும்

 இரண்டாவதில் தெட்சாணாமூர்த்தி

அவர்களினதும் மூன்றாவது சேதுராமன் பொன்னுச்சாமி அவர்களுடைய பங்களிப்புள்ள தில்லான மோகனாம்பாள் திரைபடத்தில் நாதரஸ்வரத்தில் மேல்நாட்டு சங்கீதத்தை பிரமாதமாக வாசிக்கும் காட்சிகளை காணலாம்

Thursday, July 05, 2012

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலி புத்தகமாக -வீடியோ


இதில் தொடர்ந்து வரும் 14 வீடியோக்களில் எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் ஒலிவடிவத்தில் இருக்கின்றன

முத்துலிங்கம் அவர்களின் மிகுதி கதைகளை பார்க்க அழுத்தவும்