Thursday, December 04, 2014

கிட்டப்பா -சுந்தராம்பாளின் பிரசித்தி பெற்ற காதல் கடிதங்கள் -காவியத் தலைவன் திரைபடத்தில்-வீடியோ

எம்ஜீஆர் -சிவாஜி ,ஜெயசங்கர் -முத்துராமன் ,ரஜனி -கமல் ,விஜய்-அஜீத் ,சிம்பு -தனுஷ் போன்ற போட்டி நடிகர்களை வரலாற்றில் பார்க்கும் பொழுது நன்றாக நடிக்கிறார்கள் என்று கூறபட்டவர்களிலும் பார்க்க மற்றவர் தான் புகழும் வெகுஜன ரசிகர்கள் ஆதரவும் அதிகம் கிடைத்து வந்திருக்கிறது.

ஏனோ தெரியவில்லை.அப்படி தியாகாரஜ பாகவதர் காலத்திலும் தியாகராஜ பாகவர் தான் புகழ் பெற்று இருந்தார் .இவரிலும் பார்க்க கூட பாடி நடிகக கூடிய கிட்டப்பா அவர்களிலும் பார்க்க.


இப்பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் வசந்தபாலனின்   காவியத் தலைவன் படம் கிட்டப்பா -கேபி சுந்தரம்பாள் அவர்களின் காதல் கதை இல்லை என்றாலும் கேபி சுந்தரம்பாள் ஒரு கட்டத்தில் கிட்டப்பாவுக்கு எழுதப்பட்ட பிரசித்து பெற்ற காதல் கடிதங்களை அடிப்படையானது என்று கூறப்படுகிறது .
அந்த காலத்தில் திரைபடங்கள் கேவா கலர், ஈஸ்மண்ட் கலர் ,டெக்னிக்கலர் படங்கள் என்று விளம்பர படுத்தப்படுத்துவார்கள் .அப்படி டெக்னிக்கலர் என்ற முறையில் வந்த படம் ஒன்று கொஞ்சும் சலங்கை .

காவியத் தலைவன் திரைபடத்தின் பாடல்கள் அதிகம் அந்த கால டெக்னிக்கலரில் படமாக்க பட்டிருக்கிறது குறிப்பிடப்பட்டது


 கீழே கேபி சுந்தரம்பாளின் ஆவணப்படம் வீடியோவாக

Thursday, November 20, 2014

1965 ஆண்டு டட்லி சேனநாயாக்காவின் அரசாங்கம் பதவியேற்ற பொழுது-வீடியோ

இந்த 1965 -1970 ஆண்டு கால பகுதியில் டட்லி அரசாங்கம் நடத்திய பொழுது தான்    எனது புகுமுக வகுப்பு பாடபுத்தகத்தில் சூழல் என்ற பாடம் நாலாம் வகுப்பில் இருந்தது அப்பொழுது அதில் தெரிந்து கொண்டது

 அக்கால பகுதியில் இலங்கையின் மகா தேசாதிபதி -வில்லியம் போபல்லாவா(இந்த வீடியோவில் காட்டப்படும் அமைச்சரவை பதிவியேற்றம் அவர் முன்னிலையில் தான் நடைபெறுகிறது,

அவர் பிரித்தானிய மாகாராணியின் பிரதிநிதியாக நினைத்து கொள்ளுவர் ..அப்பொழுது நிறேவேற்று அதிகாரம் ஜனாதிபதி இல்லை அவர் ஒரு ரப்பர் சீல் அதிபதி 

இலங்கையின் ராஜங்க அமைச்சர் -ஜே.ஆர் ஜெயவர்த்தனா

 இலங்கையின் உள்ளூராட்சி அமைச்சர் -திருச்செல்வம்(நீலன் திருச்செல்வத்தின் தகப்பனார் தமிழரசு கட்சியின் சார்பில் நியமன எம்பியாக்கப்பட்டு அந்த கட்சியின் அனுரசனையுடன் மந்திரியாக்கப்பட்ட தமிழ் பேச தெரியாத தமிழர்)

 சபாநாயகர்-

 உப சபாநாயகர்-சிவசிதம்பரம்(முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணி யின் தலைவர்

Wednesday, November 19, 2014

பொம்பளைங்க சுதந்திரத்தை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?..அவள் அபபடித்தான் CLIMAX -வீடியோ

கீழே உளள வீடியோவில் கமல் ரஜனிகாந் நடத்தும் உரையாடல்கள் இருக்கின்றன.இவை அவள் அப்படித்தான் திரைபடத்தில் இடம் பெற்றவை ,,,இதன் இயக்குனர் Rudhraiya (18.11.2014) அன்று காலமானார்

Saturday, November 15, 2014

1996 ஆண்டளவில் இளையராஜாவும் எஸ்.பி பாலசுப்பரமணிஜமும் உரைஜாடுகின்றனர் தூரதர்சனில் -வீடிஜோ

கீழே உள்ள வீடிஜோவில் இளைஜராஜா அவர்கள் ஹங்கேரிஇல் ஹேராமுவுக்காக இசை அமைத்த சிம்பொனி இசைபற்றி மற்றும் மகன் கார்த்திக் ராஜாவின் திருமண விருந்துபாசரமும் இருககிறது ..திரை உலக பிரமுகர்களின் பழைய முகங்களை காணலாம்

இதயம் பேசுகிறது... சஞ்சிகை கமலுக்கு நடத்திய பாராட்டு விழாவில் MGR மற்றும் பலர் பேசிய உரைகள்-வீடியோ

இதயம் பேசுகிறது பத்திரிகையும் ஏவிஎம் சேர்ந்து நடத்திய பாரட்டு விழாவில் மணியன் MGR பிரசாத் போன்றோர் பேசிய ஆடியோ வடிவம் மேலே உள்ளது 

கமல் சாருக்கு இந்த சின்னக்குட்டியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Friday, October 24, 2014

மிஸ்டர்...இது நம்ம ஆளு தொடாதே -வீடியோ





எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார்.
இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது போன்று பேசினார்.


 சற்றும் எதிர்பார்க்காத ஒபாமா சகோதர பாசத்துடன் தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என சமாளித்தார். வாலிபரின் இந்த துணிச்சல் பேச்சு அங்கு சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.


நன்றி -உதயன்

சேது தர்பார் நிகழ்ச்சியில்.....பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்-வீடியோ

சென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார். 

பரராசக்தி, பூம்புகார், பச்சைவிளக்கு உள்ளிட்ட 100க்-கும் மேற்பட்ட திரைப்படங்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. - 

நன்றி-தினகரன்

Tuesday, October 21, 2014

அல்லி தர்பாரில் ... எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்-வீடியோ



 பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார். தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜம் கிருஷ்ணன்,

 திருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த 1924 -ஆம் ஆண்டு பிறந்தார். தமிழில் கள ஆய்வு எழுத்தாளர் எனப் பெயர் பெற்ற இவர், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 40 நாவல்களை எழுதி உள்ளார்.

 "வேருக்கு நீர்', "கரிப்பு மணிகள்', "குறிஞ்சி தேன்', "அலைவாய் கரையில்' போன்ற நாவல்கள் ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.


பாரதியார், டாக்டர் ரங்காச்சாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ராஜம் கிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார். "சாகித்ய அகாதெமி', "சரஸ்வதி சம்மான்', "பாரதிய பாஷா பரிஷத்' உள்ளிட்ட உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

  நன்றி -தினமணி

Sunday, October 19, 2014

யாழ் தேவியில் காதல் செய்தால்-வீடியோ

யாழ்தேவியில் காதல் செய்தால் என்ற பாடலில் முடிவில் குரல் வடிவில் வரும் வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர்....


பலரும் நன்கு அறிந்த தமிழ் நாட்டு சூரியன் எப்.எம் இரவு நேர வானொலி அறிவிப்பாளராகும்


இவர் இணைய தமிழ் எழுத்து உரு சம்பந்தமாக புரட்சி செய்த சுரதா தமிழ்வாணனின் சகோதரர் ஆவார்..பால்ய காலத்தில் பழகிய எனக்கும் தெரிந்த நண்பரும் கூட..

.இந்த பாடலை முன்பு ஒலி வடிவத்தில் கேட்டிருக்கிறேன் இப்பொழுது தான் ஒளிவடிவத்தில் இந்த பாடலை பார்க்கிறேன் .அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

Thursday, October 16, 2014

லண்டனில் விஜயகாந்தின் பேட்டி 2003 இல்-வீடியோ



 இந்த பேட்டியை பார்க்கும் பொழுது நல்ல தெளிவாகவும் கொஞ்சம் விவரமாகவும் தன்னடகத்துடனும் தானே பேசுகிறார் .. .

இடையிலை என்ன நடந்தது உந்த ஆளுக்கு ...சில வேளை .அரசியலுக்கு வந்த பிறகு தான் கொஞ்சம் லூசாயிட்டாரோ?

 2002 ஆண்டளவில் சென்னையில் இருந்து லண்டன் நான் வந்த பொழுது அந்த விமானத்தில் இவரும் பயணம் செய்திருந்தார் ஆனால் அவர் முதல் வகுப்பில் ..

மீனபாக்கம் விமானநிலையத்துக்குள் விமானம் வரை அவரை ராஜமரியாதையுடன் அழைத்து சென்றனர் அங்குள்ள அதிகாரிகள்

 லண்டன் விமானநிலையத்தின் குடிவரவு மேசைக்கு நாங்கள் போகும் வழியில் அவரும் அவரது செயலாளரும் எதிர்பக்கமாக அங்குள்ள அறிவுபலகைகள் பார்த்த படி பட்டணத்தில் தவறப்பட்ட குழந்தைகள் போன்று ஏமாலந்தி கொண்டு வந்திருந்தார்கள்..

நான் ஒரு அறிமுக சிரிப்பை செலுத்தி கூடியும் அவர் கண்டு கொள்ளவில்லை .அந்த அளவுக்கு எதையோ தவற விட்ட தனித்துவிடப்பட்ட நிலையில்  படபடப்புடன் இருந்தார்கள்

Friday, September 19, 2014

மாண்டலின் ஸ்ரீநிவாசன் உடன் பாடகர் ஹரிகரன் ஒரு நிகழ்ச்சியில் -வீடியோ

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனயார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார்.-நன்றி தினமணி சன் டிவியில் விருந்தினர் பக்கம் என்ற நிகழ்ச்சியில் அண்மையில் அவர் கலந்து கொண்ட பொழுது கீழே julia roberts இன் EAT PRAY LOVE என்ற ஆங்கில படத்தில் இவருடைய பின்னனி இசை கலியுக வரதா என்ற பாடலுடன் அதற்க்கான வீடியோ கீழே

Thursday, September 18, 2014

WELCOME TO CANADA முழு திரைபடம் ( 1986 ஆண்டு சென்ற தமிழ் அகதிகள் பற்றிய படம்)-வீடியோ

1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர் ..

 அந்த சம்பவத்தை பின்னனியாக வைத்து 87ஆண்டளவில் கனடிய திரைபட கூட்டுத்தாபனத்தால் எடுக்கப் பட்ட திரைபடம் தான் WELCOME TO CANADA அந்த நேரம் இதைப்பற்றி வந்த ஊடக வீடியோ செய்தியை பார்க்க 1986 ஆண்டுநீயூ பவுண்ட் லாண்ட் என்ற இடத்தில் மீட்கப்பட்ட அகதிகள்

இந்த உண்மை சம்பவத்தை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட முழு திரைபடம் கீழே


வீடியோ உதவி -நன்றி முகநூல் நண்பர் கிரிதரன்

Saturday, August 23, 2014

t.s பாலையா தான் கமலின் தசவாதார பல்ராம் நாயுடு-வீடியோ

யதார்த்த நடிகர் பாலையாவின் நூற்றாண்டு இன்று தசவாதரம் பார்த்த பின் பாலையாவின் நடிப்பு தான் பால்ராம் நாயுடு கமல் என்று எனது புளக்கில் எழுதி இருந்தேன் . சமீபத்தில் கமலின் பேட்டி ஒன்று கேட்ட பொழுது கமல் கூறி இருந்தார் ..பல்ராமின் நாயுடு பாலையா தான்

Thursday, August 07, 2014

ஜிகர்தாண்டாவில் தூள் கிளப்பும் நடிகர் சிம்ஹா ...நயன்தாராவுக்கு சிலை வைத்தவர்-வீடியோ

பீட்சா திரைபடம் எடுத்த கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தாண்டா படம் பார்த்தன் .கொரியன் படத்தின்ரை கொப்பி அது இது என்ற விமர்சனங்கள் எல்லாம் இருக்கட்டும் .அதிலை நடித்த வில்லன் நடிகர் சிம்ஹாவின் நடிப்பு சூப்பர் .அந்த காலத்தில் ரஜனிகாந்த் சும்மா பீலா விடாமால் நல்லா நடித்து இருந்தால் இவருடைய நடிப்பு மாதிரி இருந்திருக்கும் ..

.படத்தின் கதை திரை மொழி திருப்பங்கள் டைரக்சன் எல்லாம் வித்தியாசம் என பலர் சொல்லி கொண்டிருக்கினம் இருக்கட்டும் ..ஆனால் எனக்கு படம் பார்த்து முடிந்த பின்னும் கண்ணுக்குள்ளை நிற்கிறது சிம்ஹா என்ற அந்த படத்தின் வில்லன் நடிகரின் நடிப்பு தான்

அவர் யார் என்றால் சூதும் கவ்வும் திரைபடத்தில் நயான்தாரவுக்கு சிலை வைத்த சினிமா பைத்தியம் தான் ..இதில் நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறது ....கீழே சூதும் கவ்வும் படத்தில் நயன்தாரவுக்கு சிலை வைத்த வீடியோ காட்சி இருக்கிறது


Wednesday, August 06, 2014

பிரிட்டனில் ஏழை -பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு -வீடியோ

/ஐரோப்பாவில் கம்யூனிச சித்தாந்தம் இல்லாமலேயே இப்போது கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையான ”எல்லோரும் சமம்; எல்லோருக்கும் சமமான வாழ்வாதாரங்கள்” என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி விட்டார்கள். அங்கே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே இருப்பது போன்ற பயங்கரமான வேறுபாடு கிடையாது//

 இந்த பிரபல எழுத்தாள குஞ்சின் காமடிக்கு அளவே இல்லாமால் போச்சு...வடிவேலு இல்லா குறையை அப்பப்ப நிறேவேற்றி கொள்ளுகிறார் .

இதுக்கு விசிலடிக்க கொஞ்சம் கூட்டம் வட்டம் வேறை. ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஜரோப்பாவில் அதிகம் வித்தியாசம் இல்லை சொல்லும் பொழுது ..இந்தியாவில் இருக்கும் விசயம் தெரிந்தவனும் விசயம் தெரியாதவன் கூட சில வேளை குழம்பலாம் . ஜரோப்பாவில் வாழும் சாதரணமானவனின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்குமென்றால்

 இந்த ஆளுக்கு லூசா...லூசு மாதிரி நடிக்கிறாரா?

http://charuonline.com/blog/?p=1437

Wednesday, July 23, 2014

80 களில் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் பற்றிய விவரணம்-வீடியோ


இந்த விவரணம் 1987 ஆண்டு ஆனி மாதம் அளவில் ஒளிபரப்ப்பட்டிருக்க வேண்டும் ..இந்த விவரணத்தில் ஜேஆர் அரசாங்கத்தின் இருந்த பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ,அமைச்சர் காமினி திசநாயக்கா,மற்றும் அன்ரன் பாலசிங்கம் கருத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன.