ஒளியும் ஒலியும்

இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு

Friday, December 30, 2016

நதியின் பாடல் -வண்ணதாசன் (FULL Version) ஆவணப்படம் -வீடியோ

சின்னக்குட்டி at 9:58 AM No comments:

Wednesday, December 07, 2016

1968 இல் Louis Malle இன் இளம் ''சோ'' ராமசாமி உடனான சந்திப்பும்.... முகமது பின் துக்ளக் நாடகத்தை பார்வையிடலும் -வீடியோ

சின்னக்குட்டி at 5:21 PM No comments:

Monday, December 05, 2016

அண்ணா,கலைஞர், எம்ஜிஆர் ,ஜெயலிலதா,சிவாஜி அனைவரும் ஒரு வைபவத்தில்-வீடியோ

சின்னக்குட்டி at 7:44 PM No comments:

Saturday, November 26, 2016

பிடல் கஸ்ட்ரோ மற்றும் உலக தலைவர்கள் - இலங்கையில் (1976யில்) நடந்த கூட்டு சேரா மகாநாட்டில்-வீடியோ

சின்னக்குட்டி at 11:38 AM 1 comment:

Thursday, November 17, 2016

கறுப்பு பணம் -'''அப்பன் ,பாட்டன் ,பூட்டனிட்டை போய் கேளுங்கடா''- எம்.ஆர் ராதா Vs நாகேஸ்-வீடியோ

சின்னக்குட்டி at 11:05 PM 3 comments:

Sunday, November 13, 2016

துக்ளக்கின் நாணய சீர்திருத்தம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?-வீடியோ

சின்னக்குட்டி at 6:40 PM No comments:

Saturday, November 12, 2016

பேலியோ டயட் - இப்பொழுது அதிகம் பேசப்படும் விடயம் -என்னங்க அது-வீடியோ

இந்த மேற் கொண்ட வீடியோ கிளிப்பில் தமிழ்மணத்தின் பொற்காலத்தில் பிரபல வலை பதிவராக இருந்த செந்தழில் ரவி இதை தனது அனுபவத்தில் இருந்து சிபாரிசு செய்கிறார் என்று கூறுகிறார் கேட்டு பாருங்கள்
சின்னக்குட்டி at 9:19 PM 1 comment:

Friday, November 11, 2016

இலங்கை தமிழ் தயாரிப்பாளரின் படத்தில் (ட்றம்பு) புதிய அமெரிக்க ஜனாதிபதி -வீடியோ

Donald Trump had acted in a Sri Lankan film இது தொடர்பான செய்திக்கு இங்கு அழுத்தவும்
சின்னக்குட்டி at 10:09 AM No comments:

Tuesday, November 08, 2016

500 ரூபா -1000 ரூபா நோட்டை ஒழிக்க ஆலோசனை சொன்ன பிச்சைக்காரன்-வீடியோ


500 ரூபா 1000ரூபா நோட்டை ஒழித்தால் இந்தியாவில் வறுமையை ஒழித்திட முடியும் என்று ஆலோசனை செய்த பிச்சைக்காரன் --இந்த வீடியோவை பார்க்க விரும்பின் கீழே  உள்ள லிங்கை அழுத்தி பார்க்கவும்

500ரூபா -1000ரூபா நோட்டை ஒழிக்க ஆலோசனை சொன்ன பிச்சைக்காரன்- இந்த வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும்
சின்னக்குட்டி at 10:04 PM No comments:

Saturday, October 29, 2016

சுந்தரராமசாமி அவர்கள் பற்றிய ஆவணப்படம் -வீடியோ

சின்னக்குட்டி at 10:39 PM No comments:

Saturday, October 22, 2016

பறையிசையுடன் ஒரு சூப்பர் உற்சாக தெரு நடனம்-வீடியோ

சின்னக்குட்டி at 9:44 AM 3 comments:

Sunday, October 09, 2016

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது-வீடியோ

சின்னக்குட்டி at 1:56 PM No comments:

Saturday, October 01, 2016

சிவாஜியின் கூத்து-ஏழை பங்களானென்று ஏமாத்தி பணத்தை சேர்த்த இரும்பு பெட்டியை காட்டு-வீடியோ

சின்னக்குட்டி at 11:01 AM 1 comment:

Thursday, September 29, 2016

ஜன கண மனவுக்கு அர்த்தம் என்ன?-வீடியோ

சின்னக்குட்டி at 4:10 PM 1 comment:

Sunday, September 25, 2016

UK 11+ - RAT RACE...டியூசன் கலாச்சாரம் ஏற்படுத்தும் பின் விளைவுகள்-வீடியோ

சின்னக்குட்டி at 5:43 PM No comments:

Saturday, September 17, 2016

எழுத்தாளர் கி.ரா பற்றிய ஆவணப்படம் இயக்குனர் தங்கபச்சானின் உருவாக்கத்தில்-MUST WATCH-வீடியோ

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு: 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 


 கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். 


 கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[1] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.-நன்றி விக்கி பீடியோ



  கி.ரா. எழுதிய இடைசெவல் என்கிற நாவலின் பெயரில் ஒரு ஆவணப் படம் உருவாகியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த தமிழ் கல்வி கலாச்சார அமைப்பின் வசந்தி பிரகலாதன் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் வீடியோ துண்டங்கள் தான் கீழே உள்ளது 
சின்னக்குட்டி at 6:41 PM 1 comment:

Tuesday, September 13, 2016

யாழ் -கள்ளு கொட்டில் கண்டவுடன் நெஞ்சுக்கை உறுத்தும் ''FULL'' ஆக போட்டு வந்தேன் -வீடியோ

சின்னக்குட்டி at 10:18 AM No comments:

Saturday, September 10, 2016

''நடந்தாய் வாழி காவேரி''' ...நதியின் போக்கை நிறுத்திறதுக்கு '''நீ''' யாரு?

கர்நாடகா, காவிரி தமிழ் நாட்டுக்கு கனத்த இதயத்தோடு திறந்து விடுறேன்னு சொல்லிருக்கு. நான் என்ன கேட்குறேன், எதுக்கு கனத்த இதயம்...? ஏன் இத்தனை வெறுப்பு, இத்தனை வன்மம்? இவ்வளவு enmity ஏன்? ஒரு நைல் நதியை மூன்று நாடுகள் பங்கிட்டுக் கொள்கின்றன..எந்தப் பிரச்சனையும் இல்லை. .#இஸ்ரேல், #பாலஸ்தீனம் இரண்டு எதிரி நாடுகள், ஒரே நதியைப் பங்கிட்டுக் கொள்கின்றன. எந்தப் பிரச்சனையும் இல்லை.. இந்த இந்தியா, பங்களாதேஷ் கூட ஒரு நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ளுது.எந்தப் பிரச்சனையும் இல்லை.. பாகிஸ்தானோடு இந்தியா ஒரு நதியைப் பங்கிட்டுக் கொள்ளுது.எந்த சிக்கலும் இல்லை. ஆனால், கர்நாடகா- தமிழ்நாடு, ஒரே நாட்டின் இரண்டு குழந்தைகள்??😁😁 ஒரு காவிரியைப் பங்கீடு செய்வதில், 114 வருசமா பிரச்சனை.

இதுல கனத்த இதயம் ஏன் வருது??? 27 வருசமா சுப்ரீம் கோர்ட் சொல்லுது. 17 வருசமா காவிரி நடுவர் மன்றம் சொன்னது. 528 அமர்வுகளில் அறிவியல் ஆய்வர்கள் சொன்னது. விவசாயிகள் சொன்னது, வேளாண் அதிகாரிகள் சொன்னது. வாஜ்பாயாய் போன்ற பிரதமர்கள் சொன்னது. பிரதமர் தலைமையிலான நடுவர் குழுக்கள் சொன்னது. இவ்வளவு பேர் சொன்ன பிறகும், கனத்த இதயத்தோடு குடுக்கிறேன்றீங்க. பந்த் நடத்துறீங்க. பஸ் அ கொளுத்துறீங்க. கர்நாடகாவை விடுங்க. சரி,

 தமிழ்நாட்டுல நம்ம கிழிச்சுக்கிட்டு இருந்தோம்? இந்தக் காவிரிப் பிரச்சனை தலைவிரித்தாடுகிற இந்தக் காலகட்டத்துல.. இந்த 100 வருசத்துல, காவிரியச் சுற்றி, ஏறி, குளம், கண்மாய் ன்னு ஆயிரம் நீர்த்தேக்கங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனா, நம்ம, என்ன உருவாக்கினோம்??? #தொழிற்சாலைகள், கூல்டரிங்க் கம்பெனி, லெதர் கம்பெனியா உருவாக்கினோம். ஒரு நதிக்கு, #நீர் #என்பது #மேலாடை. அதன் உள்ளிருக்கும், #மணல் என்பது, #உள்ளாடை. #மேலாடையை #உருவி, #கார்போரேட்டுக்கு வித்தாச்சு.உள்ளாடையை உருவி, உருவி, #லாரில வச்சு வித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கு இந்த நாடு. இந்த நாடு உருப்படுமா??

#இருக்குற மணலை எல்லாம், கொள்ளையடிச்சு, என்னைக்கோ வரப்போற, தண்ணிக்கு சிங்கி அடிக்கப்போற ஒரு தலைமுறைக்கு கோடி கோடியாக கொட்டி, இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், அந்த யூனிவர்சிட்டி இந்த யூனிவர்சிட்டி ன்னு கட்டி வைக்கிறோம்?? தண்ணிக்கு???!!! எங்க பாட்டன் #ஆத்துல #குளிச்சான். எங்கப்பன் #குளத்துல குளிச்சான். நான் குழாயில் குளிக்கிறேன். என் பையன் குளிக்கவே மாட்டான். குளிக்கிறதுக்கு ஒரு மாத்திரை கண்டுபுடிச்சுடுவான். என் பேரன் #குடிக்கிறதுக்கு #என்ன #செய்வான்???


#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு!!! #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, "எழில்மிகு கூவம்" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம்??!!! #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது??? 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை, 

சரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்? வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்???
#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா??? #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா?? கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா? எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா?? IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ??? சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்??
என்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போஅணை கட்டுனோம். 

நிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..
காவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி. 
#மகவாய் வளர்த்த தாயாகி...
அப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா? நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா? காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்


. #வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.
இவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.



நன்றி -முகநூலில் சுட்டது


#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு!!! #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, "எழில்மிகு கூவம்" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம்??!!! #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது??? 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நீர் மேம்பாட்டுத்துறை இத்தனை துறையும் சேர்ந்து சாம்பிள் எடுத்திருக்காங்க...அதுக்கு அந்த 1000 கோடி??!!!!!
சரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்? வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்???
#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா??? #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா?? கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா? எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா?? IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ??? சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்??
என்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போ ஆணை கட்டுனோம். 
நிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..
காவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி. 
#மகவாய் வளர்த்த தாயாகி...
அப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா? நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா? காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம். 
#வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.
இவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.#தாமிரபரணி ல ஊதிய உயர்வு கேட்டு போராடுனவங்கள தள்ளிவிட்டு சாகடிச்சாங்க. இன்னைக்கு தாமிரபரணியை செத்துடுச்சு!!! #வைகை ன்னு பேர் வச்ச தாலோ என்னவோ, அதுலயே கை வச்சாச்சு. வைகை செத்துப் போச்சு. #கூவம்#நதியில், குளித்து முடித்து, முருகன் கோயில் சென்று வழிபட்டார் #பச்சையப்ப #முதலியார் ன்னு சொன்னாங்க. இன்னைக்கு #கூவம் செத்துப் போச்சு. கூவத்துல போயி குளிக்க வேணாம்- நிக்க முடியுமா உங்களால. கூவத்துல படகுல போனதப் பத்தி 12 பக்கத்துக்கு, "எழில்மிகு கூவம்" ன்னு பாரதிதாசன் எழுதானனே, இன்னைக்கு அப்டியா இருக்கு கூவம்??!!! #கூவத்தை #சுத்தப் படுத்துவதற்காக 1000 கோடி பணம் ஒதுக்குனாங்களே, அந்தப் #பணம் #எங்கே #போனது??? 1000 கோடிக்கும் கணக்கு இருக்கு....பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நீர் மேம்பாட்டுத்துறை இத்தனை துறையும் சேர்ந்து சாம்பிள் எடுத்திருக்காங்க...அதுக்கு அந்த 1000 கோடி??!!!!!
சரி, நீங்களும் நானும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்? வீட்டுல குழாயை நல்லா மூட மாட்டோம். சொட்டிக்கிட்டே இருக்கும். ஒரு சொட்டு தான ன்னு. ஒரு வருடம், இப்படி குழாயிலிருந்து கொட்டுகிற நீரை கணக்கிட்ட, அந்த நீரை வச்சு, ஒரு கிராமத்தில் விவசாயத்துக்குத் தேவையான நீர் 3 நாட்களுக்கு கிடைத்துவிடும்ன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. எத்தனை வீட்ல, எத்தனை குழாயில எத்தனை சொட்டுத் தண்ணீரை நம்ம வீணடிச்சுக்கிட்டு இருக்கோம்???
#நதிக்கரையில் #நாகரீகம் #உருவாச்சுவளர்ந்துச்சு- இது தான , நாம் படிச்ச வரலாறு. இன்று, இன்று நதிக்கரைகளில் #அநாகரீகம் #வளருது. கலை வளர்த்த, செல்வம் வளர்த்த, பண்பாடு வளர்த்த, உயிர் வளர்த்து, நெல்லு வளர்த்த, சோறு வளர்த்த, நதிக்கரையில், #இன்று #அரசியல் #வளர்த்துக்கிட்டு இருக்கு.... அங்க இருக்குறவங்க, அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க- இங்க சமூக வலைத்தளங்கள் ல நம்ம, நமக்குள்ள அடிச்சுக்கிட்டு, சினிமாவை இழுக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை ல கூட, சினிமாக்காரன இழுக்காம உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா??? #ஜட்டி விக்க சினிமாக்காரன், வேட்டி விக்க சினிமாக்காரன்...காவிரிப் பிரச்சனையா- ரஜினியை இழு, கமல் இழு, விக்ரம இழு..ஏன் இன்னும் மிச்சம் இருக்குற எல்லாரையும் இழு..#நீ ரஜினிக்குத் தான் ஒட்டுப் போட்டியா?? கமலஹாசன் MP எலெக்சன் ல நின்னாரா? எத்தனை நடிகைகள், உங்க வீட்டுக்கு வந்து ஓட்டுப் போடுங்க, ஓட்டுப் போடுங்கன்னு கேட்டார்களா?? IAS, IPS அதிகாரிகள் எல்லாம் நடிகர், நடிகைகள் ஆ??? சினிமாவை இழுக்காம, நமக்கு சொந்த புத்தி இல்ல, சொல் புத்தி இல்ல. வேற என்னத்தப் பண்ண போறோம்??
என்னைக்கோ, ஒரு #கரிகாலன், ஒரு #கல்லணை கட்டினான்..அதுமட்டும் தான். கடைசியா நம்ம நாட்டுல எப்போ ஆணை கட்டுனோம். 
நிறைய ஹோட்டல் கட்டுனோம். Malls கட்டுனோம்.தியேட்டர் கட்டுனோம். கல்யாணமண்டபம் கட்டுனோம். ஒருத்தர் ரெண்டு, மூணு பொண்டாட்டி எல்லாம் கட்டினார்..
காவிரிங்கிறது, இலக்கியத்துல எவ்வளவு முக்கியமான நதி. 
#மகவாய் வளர்த்த தாயாகி...
அப்படின்னா, பிள்ளைகளை வளர்த்த தாயாகி..நடந்தாய் வாழி காவேரின்னு பாடுனான் இளங்கோ. எங்கயாவது, நடந்தாய் வாழி கங்கை னு இருக்கா? நடந்தாய் வாழி வைகைன்னு இருக்கா? காவிரி, நடந்து கொண்டே இருக்கணும். #ஊற்று பூமி #கர்நாடகாவா இருந்தாலும், #இதன் #ஆற்று பூமி, தமிழ்நாடு. 800 மீட்டர் நீண்ட காவிரியில், வெறும் 318 மீட்டர் மட்டும் தான் கர்நாடகாவில் இருக்கு. மித்த எல்லாம், தமிழ் நாட்டுல, கிளை பரப்பி, வேர் பரப்பி, மண் பரப்பி, வயல் பரப்பி, கல் பரப்பி, நீர் பரப்பி சென்று சேர்ந்து, கடைசில கடல்ல போயி சேர்த்து. வெறுமனே கடலில் கலக்குற காவிரி நீர் மட்டுமே 6TMC க்கு மேல. இதுவரை, கர்நாடகாவில் இருந்து, எத்தனை TMC தண்ணி நமக்கு வந்தது. அதுல எவ்வளவு விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தோம். 
#வாடா இந்தியாவில் #விவசாயி #சாகுறான். #தென் #இந்தியாவில், #விவசாயமே #சாகுது. முன்னெல்லாம், வீடு கட்டும் போது செங்கல் வாங்கி வச்சா, பெண்களுக்கு காவல் போடுவாங்க. இப்போ, மணலுக்கு காவலுக்கு ஆள் போடுறோம். 20 ஆண்டுகளில், மணலின் விலை, 200 மடங்கு அதிகரித்துள்ளது. மற்ற எந்த #Commodity அ விட, மணலின் விலை உயர்ந்துள்ளது. மணல், இந்த மண்ணின் சொத்து. காவிரில தண்ணி வந்துருச்சுன்னா, மணல் கொள்ளைக்கு வழி இல்ல. தண்ணி வராத வரைக்கும், மணலை கொள்ளை அடிக்கலாம். அத லாரி ல, எத்திக் கடத்தலாம். வணிகம் செய்யலாம். கோடிகளில் புரளலாம். அரசியலில் ஈடுபடலாம். பெரிய தொழில் அதிபர்கள் ஆகலாம். என்றோ ஒரு நாள், இறுதித் தீர்ப்பு வரும். அன்னைக்கு, தண்ணி இல்லாம, #எல்லோரும், #நாண்டுக்கிட்டு சாகலாம்.
இவ்வளவு பிரச்சனைகளையும், விவசாயிகள் மட்டும் தான், சபிக்கப்பட்டவர்களாக எதிர்கொண்டுக்கிட்டு இருக்காங்க. நமக்கு ஒரு அக்கறையும் இல்லை. நம்ம ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம். நமக்குத் தெரிஞ்ச 4 நண்பர்களை tag பண்ணுவோம். இந்தத் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் இடையில் எடுத்துக் போகக் கூடிய இந்தக் கருத்தும் இல்லை.

சின்னக்குட்டி at 5:54 PM 1 comment:

Tuesday, September 06, 2016

வெறும் துப்பாக்கியை வைத்து கொண்டு போர் தந்திரங்களை மட்டும் தெரிந்து கொண்டு விடுதலையை பெற முடியாது-வீடியோ

இந்த வீடியோ துண்டத்தை பார்க்க விரும்புவர்கள் இங்கே இதில் உங்கள் மவுஸை கொண்டு அழுத்தி பார்க்கவும்
சின்னக்குட்டி at 9:26 AM No comments:

Tuesday, August 30, 2016

'''நூலை ஆராதித்தல்'''பத்மநாப ஜயர் பவளவிழா லண்டனில் (28.08.16)-வீடியோ

சின்னக்குட்டி at 7:06 PM 1 comment:

Sunday, August 28, 2016

+++++ என்பது உங்களுது பெயரு....பின்னாலை இருக்கிறது ... +++++. படிச்சு வாங்கின பட்டமா-வீடியோ

பத்மாநாப ஜயர் அவர்களின்..ஜயர் என்ற பெயர் சர்ச்சை இப்பொழுது சமூக வலைதளங்களில் ஓடி கொண்டிருக்கு

.அதில் நியாயம் இருக்கலாம்

 இந்த கேள்வியை சோபாசக்தி எழுப்பி இருந்தார்..

. அதே நேரத்தில்

 சோபாசக்தி என்ற பெயரில் சக்தி என்ற பெயர் இருக்கு

 எப்படி இவர் சிவனின் மனைவி பெயரை வைச்சுக்கலாம்..

தெரியாமால் தான் கேக்கிறன்

 நான் கொஞ்சம் தமிழில் வீக்கு

 தமிழ் பண்டிதர்கள் கோவிச்சுக்காதீங்க ..என்ன
சின்னக்குட்டி at 11:57 AM No comments:

Thursday, August 25, 2016

ஜோக்கர் திரைபடத்தின் ஹீரோ - ஜிகர்தண்டா திரைபடத்திலும் கூடி அவரின் அற்புதமான நடிப்பு -வீடியோ

கூத்து பட்டறை கலைஞரான குரு சோமசுந்தரம் ஜிகதண்டா திரைபடத்தில் நடிப்பு சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியராக தோற்றமளிப்பதை மேல் கூறிய வீடியோவில் பார்க்கிறீர்கள்.

 இப்பொழுது பலராலும் பாரட்டு பெற்று ஓடி கொண்டிருக்கும் ராஜு முருகனின் ஜோக்கர் திரைபடத்தில் கதாநாயகனாக நடித்பாது பாரட்டு பெற்றுள்ளார் இவர் 2011 வெளி வந்த ஆரண்ய காண்டம் திரைபடத்தில் முதன் முதலாக நடித்து பலரின் பாரட்டு பெற்றவர்.


 பாண்டிய நாடு ,49 ஓ ,தூங்காவனம் போன்ற படங்களில் சிறிய பாத்திரங்கள் நடித்திருந்தாலும் . இப்போ ஓடிக் கொண்டிருக்கும் ஜோக்கர் திரைபடத்தில் மன்னர் மன்னன் பாத்திரத்தில் நடித்ததின் மூலம் பலரது கவனத்தை தன் பால் இழுத்திருக்கிறார்
 நல்ல தொரு கலைஞரை திரைபட உலகம் அடையாளம் கண்டிருக்கு ..வாழ்த்துக்கள்

 இந்த ஜோக்கர் திரைபடத்தில் முக நூல் பிரபல பதிவராக குறிப்பிட்டு முன் லக்கிலுக் என்று  இலங்கை இணைய நண்பர்களால் நன்கு அறியப்பட்ட யுவ கிருஸ்ணா என்ற ஒரு காலத்து சக வலைபதிவரின் பெயரும் வந்து போகிறது குறிப்பிடதக்கது
சின்னக்குட்டி at 3:45 PM No comments:

Saturday, August 20, 2016

லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் சில துளிகள்-வீடியோ



இன்று (20.08.2016) லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழ்ந்தியினதும் சாந்தி நேசக்கரமினதும் நாவல்களும் விமர்சனத்துக்கு எடுக்க பட்டிருந்தது

 இதில் குறிப்பிடத்தக்க அம்சம் கனடாவிலிருந்து தமிழ்நதியும் ஜெர்மனியிலிருந்து சாந்தியும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள்

 தமிழக நாவல்கள், புலம் பெயர் எழுத்தாளர் நாவல்கள், பிற மொழி நாவல்கள் என்று அடிப்படையில் அமர்வுகள் நடைபெற்றன.

  சுசீந்திரன் ,நித்தியானந்தன் , யமுனா ராஜேந்திரன் மற்றும் சிலர் விமர்சர்களாகவும் இருந்தனர்
சின்னக்குட்டி at 11:18 PM 3 comments:

Tuesday, August 16, 2016

DISCUSSION FORUM-'''கோர்ட் சூட் போடுவன் டா''' கால் மேல் கால் போடுவன் டா'''-வீடியோ

சின்னக்குட்டி at 1:23 PM No comments:

Sunday, August 14, 2016

பிரபல யதார்த்த திரைபட டைரக்டர் அடூர் கோபாலகிருஸ்ணன் அளித்த தமிழ் செவ்வி-வீடியோ

சின்னக்குட்டி at 9:37 PM 1 comment:

30 வருடங்கள் -மீட்டெடுத்த கனடிய மீனவர்கள் - அகதி கப்பல் தமிழர்கள் -ஒரு உணர்ச்சிகரமான சந்திப்பு -வீடியோ





1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர் 

 இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முழு திரைபடம் கீழே

 
சின்னக்குட்டி at 9:24 AM 1 comment:

Tuesday, July 26, 2016

கலை மக்களுக்கானது மாவோ சொல்லியிருக்கிறார் -கபாலி டைரக்டர் பா.ரஞ்சித்தின் சிறப்பு பேட்டி -வீடியோ

சின்னக்குட்டி at 10:49 AM 1 comment:

Sunday, July 24, 2016

SIMPLE ..BUT MASTER PLAN- வரவிருக்கும் இலங்கை தமிழ் திரைபடத்தின் ட்ரைலர்- ''மகிழ்ச்சி''-வீடியோ

சின்னக்குட்டி at 11:55 AM No comments:

Sunday, July 17, 2016

நியாயத்தை சப்தமாக சொன்னால் ..கம்னீயூஸ்ட் ,,,நக்சலைட்-வீடியோ

சின்னக்குட்டி at 8:49 PM No comments:

Thursday, July 14, 2016

கபாலி- பா.ரஞ்சித் - பால்மரக்காட்டினிலே?- வீடியோ

இலங்கை மலைய மக்களை முன்னிறுத்தி இப்படி

தேயிலை மேட்டிலே

 அப்பிடி இப்படி யாரும் எடுக்க முயற்சிக்கலாமே

 பா.ரஞ்சித் எந்த வித சமரசமின்றி எடுத்த்தாக
இந்த பேட்டியிலை சொல்லுறார் .

.வாழ்த்துக்கள்
சின்னக்குட்டி at 10:06 AM 1 comment:

Wednesday, July 13, 2016

ஏய் மாமா நீ ஒரு கோமாளி தான் -வீடியோ

இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார்.

இலங்கை வானொலியில் 1970 காலப்பகுதியில் ஒலிபரப்பான "கோமாளிகளின் கும்மாளம்" என்ற நகைச்சுவை தொடர் நாடகத்தில் மாிக்கார் என்ற பெயரில் முஸ்லிமாக பாத்திரமேற்று நடித்திருந்தார் . இதன் காரணமாக தமிழ் கலையுலகில் மரிக்கார் ராம்தாஸ் என அழைக்கப்பட்டார். "கோமாளிகள் கும்மாளம்" என்ற தொடர் இவரது திரைக் கதை வசனத்தில் ''கோமாளிகள்" திரைப்படமாக வெளியாகி இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் நகைச்சுவை திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றது.


 இலங்கையில் தயாரிக்கப்பட்ட அநேகமான உள்நாட்டு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவே இவர் பலராலும் அறியப்பட்டாலும், தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.


உள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட கலைஞர் எஸ்.ராம்தாஸ் சில மாதங்களாக உடல் நல பாதிப்புக்குள்ளான நிலையில் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். நன்றி -பிபிசி தமிழ்
சின்னக்குட்டி at 9:24 AM No comments:

Saturday, July 02, 2016

இனிவருன்ன தலமுறைக்கு இவிடே வாசம் சாத்யமோ-மலையாள நாட்டுபுற பாடகி பிரசீதா-வீடியோ

மலையாள நாட்டுப்புற பாடகி பிரசீதாவின் இன்னுமொரு அசத்தலான பாடல் கீழே ,,கேட்டு பாருங்கள் உங்களையும் கிறங்க வைக்கலாம்
சின்னக்குட்டி at 12:14 AM No comments:

Thursday, June 30, 2016

எப்படிடா இங்கு ஜாதி வந்திச்சுது ? -நுங்கபாக்கம் கொலை-வீடியோ

சின்னக்குட்டி at 10:45 AM 1 comment:

Tuesday, June 21, 2016

அந்த கால வைபவம் ஒன்றில் கமல், ரஜனி மற்றும் கன்னட பழைய பிரபல நடிகர் ராஜ்குமார்-வீடியோ

சின்னக்குட்டி at 9:38 AM No comments:

Friday, June 17, 2016

'''ராஜீவ் காந்தி கொலை மர்மம்''- இன்னும் அவிழ்க்கப்படதா முடிச்சுக்கள் -வீடியோ

சின்னக்குட்டி at 10:48 PM No comments:

Saturday, June 04, 2016

சென்னை புத்தக கண்காட்சி 2016 -பெண் எழுத்தாளர்களின் சிந்தனைகள்-வீடியோ

சின்னக்குட்டி at 6:22 PM No comments:

(cassius clay)குத்து சண்டை வீரர் முகம்மது அலியின் வாழ்க்கை வரலாறு தமிழில்-வீடியோ

சின்னக்குட்டி at 12:27 PM No comments:

Wednesday, June 01, 2016

சில தமிழரிலும் பார்க்க நல்லா தமிழ் பேசும் Jehovah's Witnesses மத பிரெஞ்சு பிரசாரகன் -வீடியோ

சின்னக்குட்டி at 11:40 AM No comments:

Friday, May 27, 2016

ஜெ... மரியாதை குறைவு ஏற்பட்டதாக துடித்த நாள் -வீடியோ

சின்னக்குட்டி at 9:27 PM 1 comment:

Saturday, May 21, 2016

WELCOME TO ''அம்மா நாடு''-வீடியோ

சின்னக்குட்டி at 2:59 PM No comments:

Wednesday, May 18, 2016

ஜெயகாந்தனின் கதைகள்- பேராசிரியர் ஜெயந்தி சிறியின் அற்புதமான உரை -வீடியோ

சின்னக்குட்டி at 10:12 PM 3 comments:

யாழிலிருந்து -இந்த பத்மினியின் ஆட்டத்தினை ஒரு கள்வனை போல் பாராதையுங்கோ.. பிளீஸ்-வீடியோ

சின்னக்குட்டி at 10:06 AM 1 comment:

Saturday, May 07, 2016

கோயம்புத்தூர் தெலுங்கர் சங்கத்தினரின் விழாவில் எம்ஜீஆர்-வீடியோ

சின்னக்குட்டி at 10:17 PM No comments:

Thursday, May 05, 2016

சீன பெண்களின் ''' நந்தகுமாரனும் பிருந்தாவனமும்'''-வீடியோ

சின்னக்குட்டி at 10:39 AM 1 comment:

Tuesday, May 03, 2016

நாம் என்ன இந்திய தமிழரா?..இந்த மலை நாட்டினிலே உழைக்கும் மக்கள் நாங்கள்-வீடியோ

சின்னக்குட்டி at 10:45 AM 1 comment:

Sunday, May 01, 2016

ஸ்டாலின் காலத்து மேதின ஊர்வலம் இது-வீடியோ

சின்னக்குட்டி at 12:20 AM No comments:

Monday, April 25, 2016

'''' மீனை வெறுத்த பூனையா '''.. நீங்க?..''''இதுக்கு டேபிள் தட்ட கேணையா'''.. நாங்க.?..-கோவனின் புதிய பாடல்-வீடியோ

சின்னக்குட்டி at 10:17 AM No comments:

Sunday, April 24, 2016

ஜெயகாந்தன் 24.04.1934 (பிறந்த நாள்)-வீடியோ

சின்னக்குட்டி at 9:59 AM No comments:

Monday, April 11, 2016

60 ,70களில் பிரபலமான நடிகைகளின் சங்கமம் சன் டிவியில்-வீடியோ

60 70 களில் பிரபலமான நடிகைகளின் ஒரு ஒன்று கூடல் மாதிரியான நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் நட்சத்திர சங்கமம் என்ற பெயரில் நடைபெற்றது

அதில் சரோஜாதேவி ,காஞ்சனா ,சாராதா, லதா,வாணிசிறி, வெண்ணிறை ஆடை நிர்மலா .ஒய்,விஜயா, ,ராஜசுலோசனா ,விஜயகுமாரி, சகுந்தலா , விஜயலலிதா ,ஜோதிலட்சிமி,அனுராதா,சச்சு,,பாரதி ஷீலா,கலந்து கொண்டனர்

இந்த வீடியோவில் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து மீட்கும் நினைவலைகள்  அற்புதம்.





நட்சத்திர சங்கமம் இந்த நிகழ்ச்சியை பார்க்க இங்கே அழுத்தவும்
சின்னக்குட்டி at 10:39 PM No comments:

Monday, April 04, 2016

பங்கை ..அங்கை சொன்னன்..சின்னத்திரை பார்த்ததாலை..கறிசட்டி கருகி போச்சு-வீடியோ

சின்னக்குட்டி at 5:20 PM 1 comment:

Wednesday, March 30, 2016

இலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீரப்பன், போன்ற ஒருவராம்-வீடியோ,

கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கள கொள்ளைக்காரன் மறுசிறா...

அவனை பற்றி 70 களில் வந்த படம் தான் Siripala Saha Ranmanika என்ற சிங்கள படம்

  படத்தின் சுருக்கம் மேலே உள்ள வீடியோ துண்டத்தில்

 இவரை பல காலம் கைது செய்ய முடியமால் தவித்து கொண்டிருந்தது அரசு யந்திரம் கடைசியில்

வடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம்  தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்
சின்னக்குட்டி at 9:47 AM 1 comment:

Tuesday, March 29, 2016

விஜயராஜ் என்னும் விஜயகாந்தின் படிப்பு இடையில் நின்றதன் காரணம் தெரியுமா-வீடியோ

சின்னக்குட்டி at 12:29 PM 1 comment:

Friday, March 11, 2016

1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ

சின்னக்குட்டி at 11:23 PM No comments:

Thursday, March 10, 2016

ஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீடியோ

சின்னக்குட்டி at 1:15 PM No comments:

இளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடியோ

வீடியோ உதவி -நன்றி செந்தில்
சின்னக்குட்டி at 9:04 AM 2 comments:

Monday, March 07, 2016

''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமிழ் நாட்டில் இலங்கை அகதி தற்கொலை -வீடியோ

சின்னக்குட்டி at 10:17 AM No comments:

டெல்லி பல்கலைகழக மாணவர் கண்ணையகுமாரின் எழுச்சி உரை(தமிழில்) -வீடியோ

சின்னக்குட்டி at 10:01 AM No comments:

நடிகர் கலாபவன் மணியின் அசத்தலான மேடை நிகழ்ச்சி-வீடியோ

நடிகர் கலாபவன் மணி பற்றிய செய்தியை அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும்
சின்னக்குட்டி at 9:20 AM No comments:

Thursday, March 03, 2016

4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா? 60 நொடியில் தூக்கம் உத்தரவாதம்-வீடியோ

பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர்.


இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்


 இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.


 இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது. அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது.


 இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.


  நன்றி -மாலைமலர்



சின்னக்குட்டி at 4:59 PM No comments:

Tuesday, March 01, 2016

மறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியில் சின்னக்குட்டியும்-ஒலி வடிவம்

 
மறைந்த பிரபல எழுத்தாளர்  செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது.



எனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர்


அந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்


தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவையில்
நேற்று இரவு எமது நிகழ்ச்சிப் பணிப்பாளர்
எழில்வேந்தனுடன் நானும் இணைந்து
அமரர் செங்கை ஆழியான் அவர்களைப் பற்றிய நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை வழங்கினோம். 

இணைய இதழியலாளர் சின்னக்குட்டி, பேராசிரியர் பால சுகுமார், மூன்றாவது மனிதன் + எதுவரை ஆசிரியர் எம். பௌசர், எமது இலங்கைச் செய்தியாளர் பரமேஸ்வரன், நூலகம் கோபிநாத், எழுத்தாளர் நல்லை அமுதன் , சாமி ஆகியோரும் தொலைத்தொடர்பு ஊடாக எம்முடன் இணைந்து நினைவுகளைப் பகிர்ந்தனர்.


அமரர் செங்கை ஆழியானது மறைவால் துயருறும் அனைவருடனும் நாமும் இணைந்து எமது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.

-ரஞ்சகுமார்




இலங்கையில் வெளிவந்த வாடைக்காற்று திரைபடம் செங்கை ஆழியானின் அவர்களின் பிரபல நாவலை அடிப்படையாக கொண்டது

இந்த நாவல் மூல பிரதியை ஏற்கனவே பார்வையிட்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் மக்களே என்று அழைக்கும் டைரக்டர் ஒருவர் இப்படம் வரும் முன்பே அதன் மூலத்தை எடுத்து ஒரு திரைபடத்தை எடுத்ததாக  கிசுகிசு உலாவியது ...

அந்த வாடைகாற்று திரைபடத்தின் சில காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் விரும்பின் பார்க்கவும்

சின்னக்குட்டி at 9:44 AM 1 comment:

Sunday, February 28, 2016

அஜீவனுடன் திரைபட கதாநாயகன்-பிரஞ்சு படம் ..ஆனால் படம் முழுக்க தமிழ் குரல்-ஒலி வடிவம்

சின்னக்குட்டி at 10:00 PM No comments:

Monday, February 22, 2016

யாழ்ப்பாணம் -நேற்று இன்று நாளையாம்-வீடியோ

சின்னக்குட்டி at 10:12 AM No comments:

Saturday, February 20, 2016

Old man Grooving-வயது என்பது வெறும் எண் மட்டுமே-வீடியோ

சின்னக்குட்டி at 11:24 AM No comments:

Friday, February 19, 2016

லண்டன் உரையாடல்-சயந்தனின் நாவல் ஆதிரை-அரசியலும் அழகியலும் -வீடியோ

சின்னக்குட்டி at 12:34 AM No comments:

Friday, February 12, 2016

மாதகல்- கொடிய புலிகேசி நாட்டுக்கூத்து-வீடியோ

சின்னக்குட்டி at 8:56 AM No comments:

Monday, February 08, 2016

கமல்ஹாசன் ஹாவார்ட் பல்கலைகழக உரை -கருத்து சுதந்திரம் இருந்தாலும் பேச முடியவில்லை-வீடியோ

சின்னக்குட்டி at 2:24 PM No comments:

தோழர் சண்முகதாசன் அவர்களின் விவரணப்படம்-வீடியோ

சின்னக்குட்டி at 9:41 AM No comments:

Saturday, February 06, 2016

புலி பாயுது -ஏழாவது பரிமாணத்திலையாம்-வீடியோ

சின்னக்குட்டி at 10:34 AM No comments:

Wednesday, February 03, 2016

டி.ராஜேந்தரின் கவர்ச்சி நடனம்-வீடியோ

சின்னக்குட்டி at 10:51 PM No comments:

Friday, January 29, 2016

சென்னை பொங்கல் புத்தக கண்காட்சியில் இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்கள்-வீடியோ

சின்னக்குட்டி at 2:21 PM No comments:

Wednesday, January 20, 2016

இளையராஜா-ரஹ்மான் மோதல் ,,முக்கியமான பாராட்டு விழாவில்-வீடியோ

சின்னக்குட்டி at 9:17 PM No comments:

Saturday, January 16, 2016

ச(ஜ)ல்லிக்கட்டு Vs PETA,,நகர படித்த முட்டாள்களின் திருவாசகங்கள் -வீடியோ

சின்னக்குட்டி at 4:38 PM No comments:

Saturday, January 09, 2016

DATING பற்றிய விவாதம் தமிழர்களிடையே ..புலம் பெயர் தமிழ் தொலைகாட்சியில்-வீடியோ

சின்னக்குட்டி at 8:58 AM No comments:

Thursday, January 07, 2016

92 வயது இளம் பெண்ணின் பரதநாட்டிய மேடையேற்றம் -வீடியோ

சின்னக்குட்டி at 7:11 PM No comments:

Friday, January 01, 2016

சின்னக்குட்டி வலை பதிவுலகில் பத்தாவது ஆண்டில்



கம்பியூட்டர் மவுசை பிடிக்க தெரியாத ஒரு கால கட்டம் 2001 அல்லது 2002 ஆண்டு என்று நினைக்கிறேன் . தட்டி தடுமாறி கஸ்டப்பட்டு தடுமாறி இணைய பக்கங்களில் வலம் வந்த பொழுது யாழ் இணையம் அகப்பட்டது . அதில் அழகு தமிழில் விவாதம் செய்து கொண்டிருந்தனர் .அதை ரசித்து ஆச்சரிய படுவதுடன் எப்படி என்று ஆவல் மேலோங்கியது .

 முயன்று பார்க்க முடியாமா என்ற ஆதங்கமும் இயலாமாயுமே முதலில் ஏற்பட்டது . அவ்விணையத்தில் குழந்தை பிள்ளை கூட தமிழில் எழுத கூடிய மாதிரியான பொறிமுறையை அவர்கள் அமைத்து வைத்திருந்தமையால்  வாழ் நிலை ஓட்டத்தில் இந்த கம்பியூட்டருடன் எதுவும் சம்பந்த படாத  இதுவும் தமிழ் எழுதி பார்த்தது ..அவ் இணையத்தின் சக நண்பர்களுடன் கதைத்து பார்த்தது ..மெல்ல மெல்ல தயக்கத்துடன் விவாதித்து பார்த்தது .....அதன் தொடர்ச்சியாக சின்னக்குட்டி என்பவன் நாள் நட்சத்திரம் தெரியாமால் பார்க்காமால் இணையத்தில் பிறந்தான்.




அப்படி மெல்ல மெல்லயாழ் இணையத்தில் தவிழ்ந்து வரும் காலத்தில் அவுஸ்திரலியா நாட்டில் வானொலி அறிவிப்பாளராகவும் இருக்கும் கனா பிரபா என்பவர் அதில் எழுதுவது வழக்கம் .2005 ஆண்டளவில் என்று நினைக்கிறன் இணையத்தில்  வலைபதிவு (blog) ஒன்றை தனக்கு உருவாக்கி எழுதி அதற்கான இணைப்பை யாழ் இணையத்தில் வழங்கி வருவதை வழக்கமாகி கொண்டிருந்தார்

அவரின் இணைப்பு மூலம் அந்த வலைபதிவு செல்லும் பொழுது  அதன் வேலைப்பாடுகளை கண்டு அதில் உள் சென்று பார்த்த பொழுது பட்டணத்தில் மிட்டாசு கடையை பார்ப்பது போல மிரள முடிந்தது.. 2006 ஆண்டு ஏதோ ஒரு கண முடிவில் ஒரு துணிவு வர  புளக் பக்கத்தில் ஒரு பாதைக்குள்  போனால் போகுது என்று நுழையும் பொழுது  தொடர் பாதைகளை வழிகாட்டி போல் காட்டி கொண்டிருந்தது சென்றேன் .....இது தான் இவ்வளவு தான் இந்தா உனது பெயரில் வலைபதிவு  என்று தந்தது ..ஏதாவது எழுது என்று சொன்னது

எனக்கு தோன்றியதை எழுதினேன் பேச்சு தமிழில் தான் எழுதினேன் ..வலைபதிவுகளை ஒன்றிணைக்கும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைந்தேன் .அந்த காலத்தில்  விரல் விட்டு எண்ணக்கூடிய இலங்கை பதிவர்கள் அப்பொழுது எழுதி கொண்டிருந்தனர் ....சுஜாதா கதைகளில் வரும் கணேஸ் வசந்த் இரட்டையர்கள் மாதிரி வசந்தன் சயந்தன் என எழுதி கொண்டிருந்த இருவர் எனக்கு வலைபதிவு உலகில்  போகும் பொழுது வழி தெரியாமால் திசை தெரியாமால் இருக்கும் பொழுது  வழி காட்டி உதவுவார்கள்.வசந்தன் என்பவர் எங்கு இருக்கிறார் தெரியாது ..சயந்தன் என்பவர் பிரபல எழுத்தாளராக இப்ப வலம் வந்து கொண்டிருக்கிறார்

அப்பொழுது எழுதி கொண்டிருந்த இலங்கை பதிவர்கள்  கனக்ஸ்,சந்திரவதனா ,மதி கந்தசாமி, டிசே தமிழன் கான பிரபா  ,சிநேகிதி,யாழ் சுதாகர் மலைநாடன் பெயரிலி வசந்தன்  பின் தமிழ் நதி.,யோகன் பாரிஸ்,சாத்திரி போன்றவர்களும் மற்றும்   இன்று தமிழ் நாட்டு வார சஞ்சிகை வண்ணதிரை யின் ஆசிரியராக இருக்கும் ஆரம்பத்தில் லக்கிலுக் என்று அறியப்பட்டவரும் இப்பொழுது யுவகிருஸ்ணா என்ற நிஜ பெயரில் வலம் வருபவரும் மற்றும் செந்தழல் ரவி  வரவணையான் என்று அழைக்கப்படுகிற செந்தில் போன்ற தமிழ் நாட்டு வலை பதிவர்களும் எங்களுடன் பயணித்தவர்களாவர்.


கீழே நான் போட்ட வலை பதிவு ஒன்றில் அப்ப இருந்த இலங்கை பதிவர்கள் அதிகமானோர் பின்னூட்டம் அளித்து இருந்தனர் அந்த பதிவை பார்க்க விரும்பின் கீழே உள்ள லிங் அழுத்தி பார்க்கவும்
http://sinnakuddy.blogspot.co.uk/2010/03/blog-post.html

அப்பொழுது வலைபக்கங்களை திரட்டும் முக்கிய திரட்டியாக பங்காற்றிய தமிழ்மணம் வாரம் வாரம் நட்சத்திர பதிவர்கள் என்பதை உருவாக்கி வலை பதிவர்கள் ஊக்கபடுத்தியது . அதில் இந்த சின்னக்குட்டியும் விரைவில் நட்சத்திர அந்தஸ்து பெற்று நட்சத்திரபதிவர் என்ற அந்தஸ்து பெற்றான் ஒரு வாரத்திற்க்கு..

இதை பொறுக்கமுடியாத ஒரு சிலர் அரசியலோ இலக்கியமோ என்ன வென்று தெரியாத இந்த அரைவாக்காட்டு சின்னக்குட்டிக்கு எல்லாம் தமிழ்மணம் நட்சத்திரபதிவர் அந்தஸ்து கொடுத்து தனது தரத்தை தாழ்த்திவிட்டது என்று எள்ளி நகையாடினர்
ஊரில் இருந்த பொழுது போராட்டமென்றால் என்ன கிலோ என்று கேட்கும்  அதுவும் வெளிநாட்டுக்கு வந்த பின் உந்த மேற்க்த்தைய அரைகுறை தத்துவங்களை விழுங்கிவிட்டு வாந்தி எடுப்பவர்கள் தான் இந்த இவர்கள் என தெரிந்தமையால் அதையெல்லாம் ஒரு என்னுள் புன்னகையுடன் கடந்து  சென்றிருக்கிறேன்.

அப்பொழுது யூரூயூப் ஆரம்பித்த கொஞ்ச காலம் தான்  நான் விரும்பி பார்த்த வீடியோக்களை பகிர்வதுக்கென்று தனி வீடியோ வலைபதிவை ஆரம்பித்திருந்தேன்.அது நான் எழுதும் வலைபதிவிலும் பார்க்க என்னையறியாமாலே மிகவும் பிரபலமாகியது ..அந்த காலத்தில் வருகை தரும் வாசகர்களை ஒப்பிட்டு சிலர் கணிக்கும் கணிப்புகளில் முதல் பத்து வலைபதிவுகளில் கூட இடம் பிடித்திருந்தது....எத்தனை நாடுகளில் வருகிறார்கள் என்று அறிவதற்க்கு இலவச குறிகாட்டி எனது வலைபதிவில் இருந்தது ....138 நாடுகளில் இருந்து  வாசகர்கள் வந்திருந்தினர். நான் அறியா  நாடுகளின் கொடிகளை கூட காட்டியது அங்கில்லாம தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து கோடி காட்டியது.

தமிழ் எழுத்துருவில் புரட்சி செய்த சுரதா யாழ்வாணன் அவர்கள் தனது பிரபலமான வெப்சைட்டில் சின்னக்குட்டி ரூயூப்  என பெயரிட்டு இணைப்பு கொடுத்து இந்த எனது வீடியோ வலை பதிவை பிரபலபடுத்தினார் ..அதற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்ளுகிறான் சின்னக்குட்டி இந்த தருணத்தில்

பிரபல தமிழ் நாட்டு பிரபலம் மாலனுக்கும் இலங்கை பதிவர் பெயரிலிக்கும் நடந்த பாஸ்போட் பற்றி இணையத்தில் நடந்த மோதலை மையமாக வைத்து அவன் என்ன பாஸ்போட் வைத்திருந்தால் என்ன என்று நகைச்சுவையாக எழுதிய கருத்து சித்திரம் மிகவும் பிரபலமான பதிவுகளில் ஒன்று.

நொங்கமால் நோகமால் வீடியோவை இணைத்து அதுக்கு ஒரு தலைப்பை மட்டும் போட்டு பத்து வருடம் வலை உலகில் பயணித்திருக்கிறேன் என என்னை நானே பாரட்டி கொண்டு  இன்னும் பல வருடங்கள் பயணிப்பேன் என உங்கள் முன் உறுதி எடுத்து  கொள்ளுகிறேன்

இவ்வளவு காலமும்  தந்த ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன்


சின்னக்குட்டி at 1:02 AM 7 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
சின்னக்குட்டி
நீங்க தான் சொல்லவேணும்?
View my complete profile
Powered by Blogger.