Tuesday, December 19, 2017

'''ரூபா''' புலம் பெயர் இயக்குனர் லெனின் சிவமும் எழுத்தாளர் சோபாசக்தியும் இணைந்து வழங்கும் திரைபடம் -வீடியோ

இந்த ரூபா என்ற திரைபடம் பிரபல புலம் பெயர் இயக்குனர் லெனின் சிவத்தின் மற்றுமொரு படம் .

.இதில் பிரபல புலம் பெயர் எழுத்தாளர் சோபாசக்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்

 இது திருநங்கைகள் பற்றிய உள்ளடக்கமான கதையாக இருக்க கூடுமோ என்ற பேசப்படுகிறது

 இலங்கை தமிழர்களில் திருநங்கைகள் இருக்கிறார்களா என்ற கேள்வியும் ஜயமும் இருந்து வந்து கொண்டிருக்கிறது

 ..இருக்கிறார்கள் 1500 பேர் வரை என்று இந்த இலங்கை புலம் பெயர் திருநங்கை கூறுகிறார்

.மேலும் இந்த திரைபடத்தை பற்றியும் கூறுகிறார் ,கூறுவதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்

Thursday, November 30, 2017

கமல் திரைபடங்களையே சுட்ட எடுத்த ஹாலிவுட் படங்கள்-வீடியோ

பொதுவாக கமல் தான் ஹாலிவுட் படங்களை சுட்டு எடுக்கிறார் என்ற கருத்து பொதுவாக இருந்து வருகிறது ..அதிசயம் என்னவென்றால் கமல் படங்களையே ஹாலிவுட்காரன்கள் சுட்டு படம் எடுத்திருக்கிறாங்கள் என்று இந்த வீடியோ துண்டம் சொல்லுது

Wednesday, November 29, 2017

'''HAPPINESS'''- `பெரு நிறுவனங்களின் சோதனை எலிகளா நாம்?' -வீடியோ

மூன்றே நாளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள குறும் படம்

Monday, November 27, 2017

தெனாலி திரைபடத்தின் பூஜை விழாவில் கமல் ,ரஜனி மற்றும் திரைபிரபலங்கள்-வீடியோ

கீழே உள்ள வீடியோ கமலின் அபூர்வ சகோதரர்கள் என்ற திரைபடத்தின் ஹீந்தி பதிப்பான அப்பு ராஜா வெளியீட்டு விழாவில் கீழே உள்ள வீடியோ கமலின் மருதநாயகம் வெளியீட்டுக்கு பிரித்தானியாவின் அரசி வந்து ஆரம்பித்து வைத்த காட்சிகள் அடங்கியவை

Tuesday, November 14, 2017

கொன்று தான் பாரும்.... வென்றே தீருவேன் -கமல் TWITTER யில்-வீடியோ

கமலகாசன் இது பற்றி ட்வீட்டரில் இப்படி பதிந்துள்ளார்

  என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். 
என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. 
இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . 

அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு.

கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.



சென்னையை பற்றி தெரியாத கதையொன்று சொல்லப் போகிறேன்-வீடியோ

அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரை தந்தி டிவியில் பாண்டேயுடன் தேர்தல் கணிப்பு ஆய்வாளராக மட்டுமே அறிந்திருந்தேன்

அண்மையில் நடந்த கமல் நற்பணிமன்ற இயக்கத்தின் கலந்தாராய்வு கூட்டத்திற்கு இந்த அருண் கிருஷ்ணமூர்த்தியை விருந்தினராக அழைத்ததும் மட்டுமில்லாது மிகவும் சிலாகித்து பேசியிருந்தார் கமலஹாசன்

.. யார் அவர் என்று அவரை பற்றி தேட முற்ப்பட்ட பொழுது அவர் கூகுள் நிறுவனத்தில் நல்லொதொரு வேலையை உதறி தள்ளிவிட்டு சூழல் பாதுகாப்புக்காக தன்னை அர்பணிப்பு செய்தவர் என்பதை அறிந்து கொண்டேன்

சென்னை சூழல் பற்றி தெரியாத பல தகவல்களை கூறுகிறார் இந்த வீடியோக்களில்

Saturday, October 28, 2017

யாழில் உம்மாண்டி யின் வருகை ..இன்றும் நாளையும்-வீடியோ

28/10/2017, 29/10/2017 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் ராஜா 2 திரையரங்கில் வெளியிடப்பட இருக்கின்றது. சனிக்கிழமை (28.10.2017) பிற்பகல் 3 மணிக்கு ஒரு காட்சியும் ஞாயிற்றுக் கிழமை (29.10.2017) பிற்பகல் 2:30 , 4:30, 6:30 காட்சிகளும் திரையிடப்படுகின்றது.

Wednesday, June 14, 2017

மாப்பிளை இவர் தான்.. ஆனால் இவர் போட்டிருக்கிற ட்றெஸ் என்னிது -ரஜனி -வீடியோ

கூவத்தூரில் அதிமுக எம் எல் ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விபரம் பற்றி மதுரை அதிமுக எம் எல் ஏ கூறிய விடயத்தை இரகசிய கமரா கொண்டு times now டிவி எடுத்திருந்து நேற்று முன் தினம் ஒலிபரப்பாக்கி பரபரபாக்கியது அதை கீழே பார்க்கவும்

  பின்னர் அதிமுக எம் எல் ஏ சரவணன் டிவியில் உள்ளது நான் தான் குரல் என்னுடையதில்லை என்று விளக்கமளித்தார் அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்தபோது சசிகலா அணியில் இருந்து விலகி கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன்.

 ஆங்கில தொலைக்காட்சியான “டைம்ஸ் நவ்”வில் சரவணன் எம்.எல்.ஏ. பேசுவதுபோன்ற ரகசிய வீடியோ நேற்று ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் சரவணன் எம்.எல்.ஏ. கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பணப்பேரங்கள் குறித்து பேசுவதுபோல காட்சிகள் இருந்தன. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.6 கோடி வரை தர முன்வந்ததாகவும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 கோடி வரை கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுவதுபோன்று அந்த காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அவர் தெரிவித்ததாக வெளியான தகவல்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்த ரகசிய வீடியோ வெளியானது குறித்து சரவணன் எம்.எல்.ஏ. இன்று கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விசுவாசி நான். அவரது மறைவுக்கு பிறகு கட்சியில் சில மாற்றங்கள் ஏற்பட்டபோது ஆட்சிக்கு எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அப்போது நான் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் எந்த காரணமும் சொல்லாமல் கூவத்தூர் விடுதிக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு சென்றபின்னர் தான் பல வி‌ஷயங்கள் எனக்கு தெரியவந்தது. அப்போது எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் தொகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்துமே நீங்கள் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான பன்னீர் செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினர்.

அந்த அடிப்படையில் கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்து கொண்டேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன்.

இந்த சூழ்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவை “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள எந்த கருத்தும் என்னுடையதல்ல. எனது குரலைபோல “டப்பிங்” செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் தங்கி இருந்தபோது நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாரும் எனக்கு பணம் தருவதாக கூறவும் இல்லை.

கடந்த சில வாரங்களாகவே என் மீது தவறான தகவல்களை பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

நான் எப்போதுமே பன்னீர்செல்வத்துடன்தான் இருப்பேன். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன். என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்ட இந்த ரகசிய வீடியோ முற்றிலும் போலியானது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் பரபரப்பில் சிக்கி உள்ள சரவணன் எம்.எல்.ஏ. இன்று காலை விமானம் மூலம் சென்னை சென்றார். அங்கு ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து இதுதொடர்பாக விளக்கம் அளிப்பார் என்று தெரிய வந்துள்ளது.


நன்றி -மாலை முரசு-http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/13135952/1090576/Saravanan-mla-says-private-TV-released-fake-video.vpf

Friday, May 26, 2017

கமலின் BIG BOSS போன்ற லண்டனில் நடந்த big brother நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா செட்டி வென்ற பொழுது-வீடியோ

சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியும், ஹிந்தித் தொலைக்காட்சிகளில் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சிதான்தான் ‘பிக் பாஸ்’. தற்பொழுது விஜய் தொலைகாட்சி பிரமாண்டமாக தயாரித்து வருகிறது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொத்து வழங்கப்போகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதை கமல்ஹாசன் முதன் முறையாக நிகழ்த்த இருக்கிறார்.

 ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பதினைந்து பிரபலங்கள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பில்லாமல், 100 நாட்கள் இணைந்து வசிக்கப்போகின்றனர். அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத் தொடர்பும் வழங்கப்படமாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும். முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனிடம் ‘பிக் பாஸ்’ பற்றிக் கேட்ட போது, “விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன்.

என்னைத் தவிற வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று. என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் வந்துள்ளது. தற்பொழுது எதிர்மறையாக இருக்கப்போகிறது. மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும் இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன்.

 இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்க வைக்கப் போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன்,” என்று ஆர்வமாகக் கூறினார். எண்டமோல் நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பத்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பியது.

மேலும் இந்த நிகழ்ச்சி பெங்காலி மற்றும் கன்னட மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் ‘சவால்கள்’ தவிர்த்து, ஒவ்வொரு போட்டியாளரும் தன்னுடன் இருக்கும் சக போட்டியாளரை வாரம் ஒரு முறை நிகழ்ச்சியில் இருந்து நீக்கவேண்டும். விஜய் தொலைக்காட்சியின் பொது மேலாளர் கிருஷ்ணன்குட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில், “இந்த புது விதமான நிகழ்ச்சியை நேயர்களுக்காக வழங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

தமிழ் மக்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் கமல் ஹாசன் போன்ற ஒரு தலைசிறந்த நட்சத்திரம் இதில் பங்கேற்கும் பொழுது இதன் தன்மை மேலும் சிறப்படைகிறது,” என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

 நன்றி -screen 4screenக்கு இங்கே அழுத்தவும்

Wednesday, May 17, 2017

வேலை வெட்டி கிடைத்தால் ..சேலை வேட்டி நாமளாயே வேண்டலாம்-ரஜனி காந்த்

வேலை வெட்டி கேளுங்கய்யா ..வேலை வெட்டி கிடைத்தால் ..சேலை வேட்டி நாமளாயே வேண்டலாம்-ரஜனிகாந்த்

 வள்ளி என்ற திரைபடத்தில் இந்த வசனம் .வருகிறது

. இந்த படத்திற்கு ரஜனி கதை திரைகதை வசனம் எழுதியதாக டைட்டிலில் காட்டியிருந்தார்கள்

 ( உண்மையில் ..அந்த காலம் இவரின் நண்பராக இருந்த மன்னார் நடராஜனால் எழுதப்பட்டது)

 இதே படத்தில் இன்னொரு சூப்பர் அரசியல் வசனம் வருகிறது ... '

'இந்த அரச யந்திரத்தை மாற்றமால் ஆட்சியை மட்டும் மாற்றி அரசியலுக்கு வருவதால் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது''' என்று ரஜனி பேசுவார்

Saturday, April 29, 2017

സഖാവ്(சகாவு)-COMRADE-தோழர்-இப்பொழுது அதிகம் பெயரால் பேசப்படும் மலையாள திரைபடம்-வீடியோ

இந்த திரைபடத்தை பற்றி மாற்று இணையத்தில் வந்த விமர்சனம் கீழே
 மலையாள திரையுலகம் நட்சத்திரங்களால் ஆனதல்ல, நல்ல கதைகளாலும், கலைஞர்களாலும் ஆனது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெரும் பாடல், சண்டை, நகைச்சுவைக் கலவை இங்கு ஏனோ அதிகம் எடுபடுவதில்லை.

 ஆனாலும் வருடம் முழுவதும் தரமான படங்களை அசாதாரணமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சேட்டன்மார்கள். கம்மட்டிப்பாடம், பத்தேமாரி, அனுராக கரிக்கான் வெள்ளம், கிஸ்மத், அங்கமலி டைரீஸ் இவையெல்லாம் கடந்த ஒரு வருடத்தில் வெளியாகி, விமர்சகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர கவர்ந்த திரைப்படங்கள். இந்த படங்கள் அனைத்திலும் பொதுவான ஒரு அம்சம், இந்த கதைகள் கேரளாவை பற்றியோ அல்லது, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையை ஒட்டியவாறே அமைகின்றன.

 ‘சகாவு’ (தோழர் ) அப்படியான் ஒரு திரைப்படமே. நாட்டின் விடுதலைக்குப் பிறகு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை திரும்பிப் பார்க்க முனைந்திருக்கிறது இந்த படம். எல்லா கட்சிகளும் தனக்கான கொள்கைகளையும், இலக்குகளையும் கொண்டே துவங்கப்படுகின்றன். காலப்போக்கில் பல காரணங்களினால் அவை அனைத்தும், மாறியும் , மழுங்கியும் போகின்றன்.

அப்படி பார்க்கையில் சகாவு கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரம் அல்லாது அனைத்து கட்சிகளின் மீதான விமர்சனமாகவும் கூட கொள்ளலாம். குறைந்த பட்ச கூலி, தொழிற்சங்கங்கள், கொத்தடிமை முறை ஒழிப்பு, மற்றும் ஏனைய சமுதாய சீர்திருத்தங்களில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பினை மூன்று மணி நேரத்தில் விமரிசயாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். காட்சிகளிலும், வசனங்களிலும், கம்யூனிஸ்ட்களின் கொள்கைகள் சற்று தூக்கலாகவே காட்டப்படுகிறது.


1950 களில் ஒரு தோழர், தற்காலத்தில் ஒரு தோழர் என இரட்டை வேடத்தில் . 50-களின் நிவிண் பாலி மக்கள் போரட்டம், மக்கள் நலன் என்றிருக்க, இளையவர் தன்னலம் கொண்டவராக வலம் வருகிறார். பிணைந்து சொல்லப்படும் திரைக்கதையில் இளையவருக்கு கட்சி, கடமை, பொது நலன் அகியவற்றில் புரிதலோடு இனிதே நிறைவுக்கு வருகிறது திரைப்படம். வழக்கம் போல மிக உற்சாகத்துடன் தன் பாத்திரத்தை செய்திருக்கிறார் நிவிண் பாலி. 50-களில் வரும் தோழரின் வீரத்துணைவியாக நம்மூர் ஐஸ்வரியா ராஜேஷ், தன் யதார்த்த உடல் மொழியினாலும், பேசும் கண்களினாலும் கவர்கிறார்.


தங்கள் பணியினை செவ்வனே செய்திருக்கின்றனர் மற்றும் பலர். கடந்த காலத்தை திரையில் கொண்டு வர ஒளிப்பதிவும், தயாரிப்பும் மெனக்கெட்டது அழகாய் அமைந்திருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உயிரோட்டம். படத்தொகுப்பில் இன்னும் சில மணித்துளிகள் குறைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

 “இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கம் கேட்கும்போதெல்லாம் நமக்கு உணர்ச்சி பெருக்கு நிச்சயம் தரும் சகாவு இளைஞர்களுக்கு வரலாற்றில் பாடம். சற்றே நீளமாக தோன்றினாலும், திரைப்படம் நிறைவுப் பெரும் போது நமக்கும் ஏனோ கைகளை முறுக்கி உயர்த்தி ‘சகாவு’ என்று முழக்கமிடத் தோன்றுகிறது


மாற்று இணையத்தில் வந்த விமர்சனத்தை அந்த தளத்திலையே படிக்க விரும்பின் இங்கே அழுத்தவும்- நன்றி மாற்று

நன்றி -மாற்று

Wednesday, March 29, 2017

ரஜனிகாந்தும் யாகாவா முனிவரும்-வீடியோ

நான் தான் கடவுள்  எனக்கு வயது 5000  என்று 90 களில் தமிழ் நாட்டில் சொல்லிக்கொண்டு திரிந்த யாகாவா முனிவரை  மறந்து கொண்டிருக்க மாட்டீர்கள் .. இவரின் சட்டை பையில் எப்பொழுதும் உள்ளூர் சிகரட்டு பைக்கட் இருந்து கொண்டிருக்கும் ..இவர் சொல்லும் எதிர்வு கூறல்கள்  நடந்தும் இருக்கின்றன. இவர் ஒரு சித்தர் என்று கூறி பல அறிஞர்கள்  ஆன்மிவியாளர்கள்  இவரிடம்செ ன்று  கலந்து உரையாடியதுமுண்டு. அப்போதைய பிரபல சன் டிவியும்  இவரை பேட்டி கண்டும்  பிரபலபடுத்தியது

அவர் சொன்ன பல விசயங்களில் ரஜனி காந்த் பற்றியதும் உண்டு . ரஜனி காந்தின் பின் ஒரு ஒளி வட்டம் ஒன்று தெரிகிறது charisma இருக்கு .எதிர்காலத்தில் இந்த நாட்டு அதிபதியாக வருவார்  மற்றும் இலங்கை பாகிஸ்தான் சீனா நாட்டு பிரச்சனைகளையும் தீர்ப்பார் என்றும்


அதன் பின்  ரஜனி காந்த் அந்த யாகாவா முனிவரிடம் சென்று நீங்கள் தான் என் கடவுள் என்று சொல்லி ஆசி பெற்றதாகவும் அந்த நேரம் செய்திகள் வந்தன.

ரஜனி காந்த்  90 களில் இலங்கை போர் உக்கிரம் பெற்ற காலங்களில் தனது நண்பர்களிடம் கூறியதாக கிசுகிசு பேசப்பட்டது , ரஜனி காந்த்  தன்னிடம் உள்ள அந்த கவர்ச்சி சக்தியை வைத்து இலங்கை பிரச்சனையை  என்னால் தீர்க்க முடியும் ...ஆனால் ஒரு இயல்பான போக்கு எதிராக  எனது சக்தியை பிரயோகிக்க விரும்பவில்லை என்று கூறியதாகவும்

யாகவா முனிவரும்  சிவசங்கர் பாபா  என்ற நடன கலைஞரும் தான் தான் கடவுள் என்று  தொலைகாட்சி  விவாதத்தில்  அடிப்பட சம்பவங்களும் நடந்திருக்கின்றன

கீழே  பிரபல அறிவிப்பாளர்  ரவி பெர்னாட்  யாகாவா முனிவரை பேட்டி கண்ட வீடியோவை பார்க்காலாம்



யாகாவா முனிவர் மாதிரி த்த்துவங்களயும் நடை உடை பாவனையையும் வைத்து நடிகர் விவேக் திரைபடத்தில் கலாய்த்ததை கீழே உள்ள வீடியோவில் மற்றும் தான் தான் கடவுள் என்று டிவி விதவாத்த்தில் யாகாவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடிப்பட்டதை கலாய்க்கும் காட்சிகளையும் காணலாம் யாகாவா முனிவரின் 55 வது பிறந்தாளில் பிரபலங்கள் பங்கு பற்றிய வீடியோ

Thursday, March 23, 2017

எழுத்தாளர் அசோகமித்திரனின் படைப்புக்கள்-வீடியோ

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

 ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார். எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார். கணையாழி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

 1954ஆம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.

நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தவை. பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர்.

 பழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர். நன்றி -தமிழ் பிபிசி

Wednesday, March 01, 2017

,'''சவுக்கு சங்கர்''- வலைபதிவர்(Blogger)....திமுக,,அதிமுக இரண்டு பேருக்குமே சிம்ம சொப்பனமாக இருந்தவர்-வீடியோ






சவுக்கு சங்கரின் இணையதளத்தை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்




தமிழ்நாட்டில் 2008ல் நடைபெற்ற தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கைதான சங்கர் என்பவர் நடத்தும் இணையத்தளமாகும். 2008ல் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இலஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் உரையை ஏப்ரல் 14, 2008ல் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் வெளியிட்டது.

அந்த உரையாடலில் திரிபாதி உபாத்யாவிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கணக்கு விபரங்களை வருமானவரித் துறையிடமிருந்து வாங்குமாறு கூறியதாக அந்த செய்தி அறிவித்தது. இப்பிரச்சினையில் தொலைபேசி உரையாடலை செய்தியாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த சங்கர் திசம்பர் 2008ல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Thursday, February 16, 2017

காவல்துறைக்கு எதிராக பற்றி எரியும் பாரிஸ் புறநகர் - பிபிசி தமிழ்-வீடியோ

பாரிஸ் காவலர்கள் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் செய்துள்ள கருப்பின இளைஞருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் பாரிஸ் நகர தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்திவருகிறார்கள். 


அந்த இருபத்தி இரண்டு வயது இளைஞர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் வெளியானதில் இருந்து பாரிஸ் புறநகர் பகுதிகளில் பதட்டம் அதிகரித்து வருகிறது.


 ஒரு காவலர் மீது பாலியல் புகாரும் மூவர் மீது தாக்குதல் புகாரும் பதியப்பட்டுள்ளது. ஆனால் அதனால் பாரிஸ் தெருக்களில் வெளிப்படும் கோபத்தைக் குறைக்கமுடியவில்லை-நன்றி பிபிசி தமிழ்

Tuesday, February 14, 2017

எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம்....! அப்பவே அப்பிடி ...இனி சொல்லவா வேணும் -வீடியோ-

இந்த எடப்பாடி பழனிச்சாமி தான் சசிகலாவின் தீர்ப்பு பிறகு அதிமுக எம் எல் ஏக்காளல் முதல்வராக போறது தேர்ந்து எடுக்கப்பட்டவர்

Saturday, January 21, 2017

Sunday, January 08, 2017

SAVE JALLIKATU-மாபெரும் பேரணி -சமூக வலைதளங்கள் மூலம் நடத்தி காட்டினர்-வீடியோ

தீடிரென்று திரண்ட் இளைஞர்கள் திக்குமுக்காடிய பொலிஸ் இந்த வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும்