வாசகர் வட்டம்

Thursday, December 29, 2022

70 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இந்திரா பார்த்த சாரதியின் நாடகம் மழை -ஒலிவடிவம்

ஈழத்து தமிழ் நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரான நாடக நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்திய 70 நாடகங்களில் முதல் வெற்றி நாடகம் இந்திய நாடக ஆளுமை பத்மஸ்ரீ பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதிஅவர்கள் எழுதிய “மழை”. அரை நூற்றாண்டுக்கு முன்னர் 1970 இல் எழுதப் பட்ட இந்த நாடகம் தமிழக சிறு சஞ்சிகையான “கசடதபற “ வில் முதல் பிரசுரமானது. 1994 இல் நடந்த சுவிஸ் நாடக விழாவிலும் , 2010இல் நடந்த சென்னைநாடவிழாவிலும் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில் “மழை” நாடகம் மேடையேற்றப்பட்டது. மழை நாடகம் 40 தடவைகளுக்கு மேல் பல நாடுகளிலும் மேடையேற்றப்பட்டது. இந்த நாடகம் 23-09-1978 இல் இலங்கை வானொலியில் மேடை நாடக வரிசையில் ஒலி பரப்பானது.வானொலிக்கென தயாரித்தவர் கே எம் வாசகர் . அந்த நேரத்தில் மேடை நாடகத்தில் நடித்தவர்களே வானொலி நாடகத்திலும் நடித்தார்கள். நடிகர்கள்: பேராசிரியர் சந்திரசேகர் -இர ஸ்ரீநிவாசன் ரகு - க பாலேந்திரா நிர்மலா - ஆனந்தராணி ராஜரட்ணம் (பாலேந்திரா ) டொக்டர் -சுகந்தன் பிளாஞ்சார்ட்

No comments: