வாசகர் வட்டம்

Saturday, September 17, 2016

எழுத்தாளர் கி.ரா பற்றிய ஆவணப்படம் இயக்குனர் தங்கபச்சானின் உருவாக்கத்தில்-MUST WATCH-வீடியோ

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு: 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. 


 கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். 


 கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[1] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.-நன்றி விக்கி பீடியோ



  கி.ரா. எழுதிய இடைசெவல் என்கிற நாவலின் பெயரில் ஒரு ஆவணப் படம் உருவாகியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த தமிழ் கல்வி கலாச்சார அமைப்பின் வசந்தி பிரகலாதன் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் வீடியோ துண்டங்கள் தான் கீழே உள்ளது 

1 comment:

ruthraa e paramasivan said...

திரு.கி.ரா அவர்களின் குறும்படம் கண்டு மெய்சிலிர்த்தேன்.அவரது
தமிழ் எழுத்தின் ஒவ்வொரு நாடி நரம்பிலும் இந்திய தேசத்தின் கனவு
ஒரு கந்தல் "வேட்டி"யின் ஊடாய் தெரிவது போல் தெரியும்.அந்த "கோபல்ல கிராமம்" இந்திய முகத்தின் விஸ்வரூபம்.அவரது எழுத்து ஒவ்வொன்றும் ஒரு "பாரத ரத்னா"வையும் விட கனமானது.அவர் நீடூழி
நீடூழி வாழ வேண்டும்.

அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்

https://oosiyilaikkaadukal.blogspot.com/