வாசகர் வட்டம்

Friday, July 31, 2009

ஒரு பாடல்-வீடியோ

Monday, July 20, 2009

பத்மினியை நாட்டியத்தில் தோற்கடித்த எம்ஜிஆர்-வீடியோ


Padmini Bharatanatyam Dance - Click here for more blooper videos

Saturday, July 18, 2009

நாகேஷ் உடன் ஜெயலலிதா கூத்து -வீடியோ

Friday, July 17, 2009

மரம்தான் ,மறந்தான் எல்லாம் மரம்தான்..-வைரமுத்துவின கவிதை

Thursday, July 16, 2009

சுரதா யாழ்வாணன்-கனேடிய இலக்கிய தோட்ட விருதுகள்

காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கப்படும் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2009ஆம் ஆண்டில் திரு. சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுரதா யாழ்வாணன் தமிழ் கணினித் துறைக்குப் பங்களித்து வருபவர்களுள் முக்கியமான ஒருவராவார். யாழ்ப்பாணத்தில் 1961இல் பிறந்த சுரதா, 1984 முதல் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இளமைக் கல்வியை யாழிலும் பின்னர் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்ப மின்னணுவியல் (Information electronics) துறையில் மேற்படிப்பு பெற்றுத் தற்பொழுது அத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழில் தட்டச்சுசெய்ய விரும்புவோர் வசதிக்காகப் பல்வேறு வகையான நிரல்களை சுரதா எழுதியுள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம் தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு (UNICODE) மாற்றும் பொங்குதமிழ் குறியீட்டு மாற்றி ஒருங்குறியில் தகவல் பறிமாற மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் (Romanized) முறையில் தமிழ் எழுத விரும்புவோர் தமிழைக் கணினியில் பாவிப்பதிலிருக்கும் தயக்கத்தை இது பெரிதும் குறைக்கிறது. சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிகோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல், பாமினி, அமுதம் உள்ளிட்ட பல தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தமக்குப் பரிச்சயமான உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி யுனிகோடில் எழுத உதவும் இந்த நிரலி தமிழில் யுனிகோட் புழக்கத்தைப் பரவலாக்கப் பேருதவியாக இருந்தது.

இவை தவிர யுனிகோடில் இல்லாத பழைய தமிழ் மீயுரை (hypertext) பக்கங்களை உலகத் தரமான யுனிகோடிற்கு மாற்ற உதவும் மென்கலன், தமிழிலேயே உள்ளிட்டு தேடக்கூடிய யாழ்தேவி போன்ற பல பயனுள்ள பங்களிப்புகளையும் சுரதா தந்திருக்கிறார். சமீபத்தில் பார்வையில்லாதவர்களும் தமிழில் கணினியைப் பயன்படுத்த உதவும் தமிழ் படிப்பி (Text to speech) நிரலியையும் சுரதா வடிவாக்கி வருகிறார்.


நன்றி- காலச்சுவடு

புலம் பெயர் தமிழ் இளைஞர்களும் -GANG கலாச்சாரமும்





கனடா, ரொறன்ரோவில் கிறிஸ்ரியன் தனபாலன் (வயது 22 என்ற தமிழ் இளைஞன் கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ரொறன்ரோ நகரில் கிளமோர்கன் பார்க்கில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்து விட்டார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஈளைஞன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு ரொறன்ரோவிலுள்ள தமிழ் சமூகத்திடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனபாலன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அங்கு 23 பேரடங்கிய மற்றொரு குழுவினரும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி பொலிஸ் சார்ஜன்ட் சாவாஸ்கிரியாகூ கூறியுள்ளார்.

இந்த இரு குழுவினருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றைய குழுவினர் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்ட போதும் பின்னர் அவர்கள் திரும்பி வந்ததாகவும் நள்ளிரவில் இரு குழுக்களும் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபாலும் நண்பர்களும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இரு குழுவினரும் தமிழர்கள்