வாசகர் வட்டம்

Sunday, October 11, 2015

'''பொம்பிளை சிவாஜியை''' ..தெரியாதோ நோக்கு தெரியாதோ-வீடியோ




சென்னை: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பழம் பெரும் நடிகை மனோரமா நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் பழம் பெரும் நடிகை மனோரமா. 78 வயதாகும் அவர் 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த வாரம் கூட சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடல் தேறிய நிலையில் இருந்த அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று இரவு 10.50 மணியளவில் அவருக்கு வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

 இதை அறிந்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் தி.நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரபலங்கள் அஞ்சலி: மனோரமா இறந்த செய்தி அறிந்து திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் முதல் திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவர் வீட்டுக்கு திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைந்த நடிகை மனோகரமா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர் நடிகை மனோரமா கலை உலகின் தாய் என்றும் சேலை கட்டிய சிவாஜி என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர் திரையுலகை ஆட்சி செய்து வந்தவர் ஆச்சி என கூறினார்


  நன்றி -தினகரன்.

No comments: